வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு தனிமனித வளர்ச்சிக்கு மட்டுமே உரித்தானது. ஒரு தனிமனிதன் வளர்ச்சி அடைந்தால் அந்த குடும்பம் வளர்ச்சி அடையும், ஒரு குடும்பம் வளர்ச்சி அடைந்தால் அந்த ஊர் வளர்ச்சியடையும், அந்த ஊர் வளர்ச்சி அடைந்தால் அந்த நகரமே வளர்ச்சியடையும், ஒரு நகரம் வளர்ச்சி அடைந்தால் ஒரு நாடே வளர்ச்சியடையும் ஆகையால் வாஸ்து என்பது தனிமனித வளர்ச்சிக்கு மட்டுமே 100% பலன் அளிக்கும்… பயனளிக்கும்....
ஆகையால் நாம் குடியிருக்க கூடிய வீட்டை மிகச்சரியாக 100% வாஸ்து படி அமைத்துக் கொண்டால் நாம் எங்கு சென்று எந்த மாதிரியான தொழில் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி என்பது இயல்பாகவே நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்...
அதுமட்டுமல்லாமல் வாஸ்து என்பது ஒரு குடும்பத்திற்குள் ஆரோக்கியம் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் ஒற்றுமையுடனும், குடும்ப நபர்களை எப்பொழுதுமே நிம்மதியுடனும், வாழ்நாள் முழுக்க வைத்துக்கொள்ளும். இதுவே வாஸ்து சாஸ்திரத்தின் நுட்பம்.
நாம் குடியிருக்கும் வீட்டுக்கு மட்டுமே வாஸ்து பார்த்தால் போதும் என்றால் அது மிகையாகாது. நாம் செய்யக்கூடிய தொழில்கள் எதுவானாலும் அதுவும் சில இயற்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்... அதாவது வாஸ்துபடி அந்த தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளும் போது அல்லது தொழில் செய்யக்கூடிய இடங்களை அமைத்துக் கொள்ளும் பொழுது அந்த தொழில் நமக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் அல்லது நஷ்டங்களை அடையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆகையால், வாஸ்து என்பது இரண்டு வகைகளாகப் பிரித்து ஒன்று தனிமனித வாஸ்துவும் மற்றொன்று பொது வாஸ்துவாகவும் நாம் கடைபிடித்து வருகிறோம்...
Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy